கிராம மக்களுக்கு இது பேரிழப்பு.. சங்கர் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்!
சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியது சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி. இந்த நிலையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் அவரது இறப்பிற்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
அதில், சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்த முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் சங்கர். திறமையான ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கியவர் சங்கர்.
நாட்டின் நிர்வாக கட்டமைப்புக்கு தேவையான 1000-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல அரசு அதிகாரிகளை உருவாக்கியவர். கிராம மாணவர்களுக்காக உதவியவர் சங்கர். இலவசமாக பயிற்சி வழங்கியவர் சங்கர்.
[ சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நக்கீரன் கோபால் உருக்கம்!! ]
இது தமிழக மக்களுக்கு பெரிய இழப்பாகும். சங்கரின் மறைவு கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பாகும், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.