எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ங்க- மு.க.ஸ்டாலின் டிமான்ட்
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
Recommended Video
சென்னை: பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் முடிவு கட்டினர். அதற்கு பதில் பாஜகவை தேர்வு செய்தனர்.
இந்நிலையில் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதால் அங்குள்ள லெனின் சிலை இன்று அகற்றப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
பெரியார் குறித்து டுவீட்
இந்நிலையில் பெரியார் சிலை அகற்றுவது குறித்து எச்.ராஜா ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில் லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமியின் சிலை என்று கூறியுள்ளார்.
வலுக்கும் கண்டனங்கள்
எச்.ராஜாவின் இந்த டுவீட்டுக்கு கி.வீரமணி, சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வருகின்றனர்.
குண்டாஸ் சட்டம்
இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் ஹெச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் அடிக்கடி பேசுகிறார், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கூட்டம் கூட்ட
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக என்னுடன் ஓபிஎஸ் நேற்று பேசினார். மார்ச் 9-ஆம் தேதி மத்திய அரசின் கூட்டத்திற்கு பிறகு பேரவையை கூட்டலாமா என்றார். அது காலத்தை நீட்டிக்கும் செயல் என்பதால் முன்கூட்டியே சட்டசபையை கூட்ட வேண்டும் என்றேன் என்றார் ஸ்டாலின்
ரஜினிக்கு பதிலடி
மேலும் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி நேற்று ஒரு விழாவில் கூறியிருந்தார். அதற்கு ஸ்டாலின் தமிழகத்தில் வெற்றிடம் ஏதும் இல்லை என்றார்.