ஆர்.கே.நகரில் அதிமுக மா.செ.வை விட ஓவராக வேலை பார்த்த சந்தீப் சக்சேனாவை நீக்குக - ஸ்டாலின் 'பொளேர்'
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. மாவட்ட செயலாளரை விட மிக அதிகமாக வேலை செய்த தேர்தல் ஆணையாளர் சந்தீப் சக்சேனாவை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்ப நிதியில்லை என தமிழக அரசு தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது. மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, அதிமுகவினரை விட அதுவும் ஒரு மாவட்ட செயலாளரைவிட அதிகம் வேலை செய்திருக்கிறார். அதனால் அவரை நீக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.