கொள்ளையர்களால் தாக்கப்பட்ட லாவண்யாவை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.. நலம் விசாரிப்பு
கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள லாவண்யாவை மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
Recommended Video
சென்னை: கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள லாவண்யாவை மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் லாவண்யா. இவர் கிண்டியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 13ம் தேதி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பும் போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் லாவண்யாவை வழிமறித்து தாக்கி இருக்கிறார்கள். அதோடு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
அந்த மர்ம நபர்கள் இரும்பு பைப்பால் லாவண்யாவின் தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளனர். அவரிடம் இருந்து 15 சவரன் நகை, ஐ-போன், பைக் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லாவண்யாவை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். லாவண்யாவின் உடல் நிலை குறித்து கேட்டு நலம் விசாரித்தார்.