ஆளுநருக்கு எதிரான திமுகவின் தீவிரமான போராட்டம் இரவோ நாளையோ கூட இருக்கும்- ஸ்டாலின்
திமுகவின் போராட்டம் இன்று இரவோ அல்லது நாளையோ கூட தீவிரமாகலாம் என ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: ஆளுநருக்கு எதிரான திமுகவின் தீவிரமான போராட்டம் இன்று இரவு அல்லது நாளை கூட தீவிரமாகலாம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்லுக்கு நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
தற்போது ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸார் விடுதலை செய்தனர். அப்போது ஸ்டாலின் கூறுகையில் தீவிரமான திமுகவின் போராட்டம் இரவோ அல்லது நாளையோ கூட இருக்கும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்