மு.க. ஸ்டாலினின் எழுச்சிப் பயணம் மழையால் ஒத்திவைப்பு!
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் எழுச்சிப் பயணம் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை; திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சிப் பயணம் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நமக்கு நாமே சுற்றுப் பயண பாணியில் நவம்பர் 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இந்த பயணம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஓரிருநாளில் அறிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது.
இதையடுத்து தற்போதைய மழைகாலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடும் என ஸ்டாலின் தரப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் தற்போது இந்த பயணத்தை ஒத்திவைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் பொங்கலையொட்டி ஸ்டாலின் எழுச்சிப் பயணத்தைத் தொடங்கலாம் எனவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.