திமுக தலைவர் கருணாநிதியை ஆம்புலன்ஸில் ஏற்றிய போது கண்கலங்கிய ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிய போது ஸ்டாலின் கண்கலங்கினார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிய போது ஸ்டாலின் கண்கலங்கினார்.
கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
ஆனால் கட்சியில் மட்டும் ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
திடீர் விசிட்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்துக்கு திடீரென அழைத்து வரப்பட்டார் கருணாநிதி. இதையடுத்து அவர் அங்குள்ள வருகை பதிவில் மு.க. என்று தனது கையெழுத்தையிட்டார்.
முரசொலி கண்காட்சி
முரசொலி அலுவலகத்துக்கும் சென்ற அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிட்டார். வீட்டில் இருந்தபடியே பேரப் பிள்ளைகளுடன் விளையாடும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வந்தது.
கருணாநிதி மகிழ்ச்சி
கடந்த ஜூன் 3 -ஆம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை கருணாநிதி சந்தித்து புன்முறுவல் செய்தார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தார்.
உடல்நலம் பாதிப்பு
கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு வதந்திகள் வெளியாகின. இதையடுத்து அவருக்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்டாலின் கண்ணீர்
இந்நிலையில் கருணாநிதிக்கு நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ரத்த அழுத்த குறைந்தது. இதையடுத்து அவரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. அப்போது கருணாநிதியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிய போது ஸ்டாலின் கண்கலங்கினார்.