சென்னை பேரணியில் செல்ஃபி எடுத்த தொண்டரை அறைந்த ஸ்டாலின் - வைரல் வீடியோ
சென்னை பேரணியில் செல்ஃபி எடுக்க வந்த தொண்டரின் கன்னத்தில் ஸ்டாலின் அறைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
Recommended Video
சென்னை: பேரணி கூட்ட நெரிசலில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் கன்னத்தில் ஸ்டாலின் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை அண்ணாசாலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சாலைமறியல் போராட்டம் பேரணி நடைபெற்றது.
ஊர்வலமாக நடந்து மெரினாவிற்கு சென்று கொண்டிருந்தனர். போராட்டத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், அவ்வளவு கூட்ட நெரிசலிலும் ஸ்டாலினுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க செல்போனை கொண்டு சென்றார். அதைத் தடுத்த ஸ்டாலின், அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்ததோடு அவரை தள்ளியும் விட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட போது அவருடன் தொண்டர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் பயணம் செய்த போது, அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் ஸ்டாலின் அடித்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியாவும் வைரலாக பரவியது.
இதனையடுத்து ஸ்டாலினிடம் அடி வாங்கிய ஆட்டோ டிரைவர் திலீப்பை சந்தித்த தி.மு.கவினர், அவரை ஸ்டாலினிடம் அழைத்து வந்தனர். ஸ்டாலினைச் சந்தித்த அவரும் ஸ்டாலின் தன்னை அடிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலினுடன் ஆட்டோ டிரைவர் திலீப் செல்ஃபி எடுத்து கொண்டார்.
இதேபோல சென்னையில் அடி வாங்கிய இளைஞரை அழைத்து தனியாக செல்ஃபி எடுத்துக்கொள்வாரா ஸ்டாலின் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.