ஜெனிவா செல்கிறார் மு.க.ஸ்டாலின் - ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பு
சென்னை: ஜெனிவாவில், ஜூன் 12ஆம் தேதி தொடங்க உள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் ஜெனிவாவுக்கு அடுத்தமாதம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நாவின் 35வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பங்கேற்பதுகுறித்து தி.மு.க தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'மு.க.ஸ்டாலின் ஐ.நா சபையில் அளித்த டெசோ அமைப்பின் தீர்மானங்கள், ஐ.நா சபையின் இந்த ஆண்டுக்கான அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில், ஜூன் 12ஆம் தேதி தொடங்க உள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழீழ மக்களின் பிரச்னைகள் குறித்தும், விடுதலைக்கான தீர்வுகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.