For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்த்தாண்டம் பாலம் தரமான பொருட்களால் கட்டப்படுகிறதா? - எம்.எல்.ஏ கேள்வி

மார்த்தாண்டத்தில் அமைக்கப்படும் பாலம் தரமான பொருட்களைப் பயன்படுத்தி, உறுதியாக கட்டப்படுகிறதா என பிரின்ஸ் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: மார்த்தாண்டத்தில் அமைக்கப்படும் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுமக்களுக்கு அச்சம் எழுந்துள்ளதால் அதனை பயன்படுத்த தயங்குகின்றனர் என எம்.எல்.ஏ பிரின்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

மார்த்தாண்டம் பகுதியில் பாலம்கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் தரமான பொருட்களால் கட்டப்படுகிறதா என பொதுமக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்த்தாண்டத்தில் நடைபெறும் இரும்பு மேம்பால பணிகள் குறித்து பொதுமக்களிடமும், பொறியாளர்களிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

MLA Prince questioned about the strength of Marthandam bridge.

இந்த சாலையில் எப்போதும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் பாலம் உறுதியாக அமைக்கப்படுகிறதா என்று சந்தேகமாக இருப்பதாக பொறியாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரம் குறித்த சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனால் பாலத்தின் உறுதிதன்மை குறித்து மக்களுக்கு அதிகாரிகள் விளக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் இதுபோல் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. தமிழகத்திலும் இது போன்ற நிகழ்வு ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தை போக்க மத்திய அமைச்சரும், அதிகாரிகளும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
In Marthandam, bridge construction is under progress. MLA Prince questioned about the strength of the bridge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X