For Daily Alerts
Just In
கதிராமங்கலம், நெடுவாசல்ன்னு எவ்ளோ பிரச்சனை இருக்கு.. ஊதிய உயர்வு தேவையா? ஸ்டாலின் காட்டம்
கதிராமங்கலம், நெடுவாசல் என்று பல பிரச்சனைகள் தமிழ் நாட்டில் இருக்க சம்பள உயர்வு தேவையற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: எம்எல்ஏக்களின் சம்பள உயர்வை தான் வரவேற்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக எம்எல்ஏக்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ரூ.55 ஆயிரம் ஊதியமாக பெற்று வந்த எம்எல்ஏக்கள் இனி ரூ.1.05 லட்சம் பெறுவார்கள்.
இந்த அறிவிப்புக் குறித்து செய்தியாளர்கள் மு.க ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், இதனை நான் வரவேற்க வில்லை என்று கூறினார்.
மேலும், தமிழ் நாட்டில் கதிராமங்கலம், நெடுவாசல் என ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்க எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு தேவையற்றது என்றும் ஸ்டாலின் காட்டமாக பேசினார்.
Comments
English summary
MLA salary hike is unwanted one says the opposition leader MK Stalin.
Story first published: Wednesday, July 19, 2017, 14:19 [IST]