For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 அமாவாசைக்குள் இந்த ஆட்சி கலையும்.. கோவையில் சாபம் விட்ட செந்தில் பாலாஜி

2 அமாவாசைக்குள் இந்த ஆட்சி கலையும் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி அரசுக்கு சாபம் விட்ட செந்தில் பாலாஜி-வீடியோ

    கோவை: 2 அமாவாசைக்குள் இந்த ஆட்சி கலையும் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் அமமுக பொதுக்கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

    எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் சசிகலா, டிடிவி தினகரன் போட்ட பிச்சையில் தான் அமைச்சர்களாக உள்ளனர்.

    MLA Senthil Balaji criticised the State Govt. in Kovai

    தினகரன் நினைத்திருந்தால் அமைச்சரவையை மாற்றி இருக்கலாம். சுயம்பாக வளர்ந்ததாக கூறும் எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்ததை தமிழக மக்கள் பார்த்துள்ளனர். ஜெயலலிதா இருந்திருந்ததால் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருக்க முடியாது.

    தைரியம் உள்ள முதலமைச்சராக இருந்ததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, சட்ட மன்றத்தை கூட்டி மீண்டும் முதலமைச்சராகி காட்டுங்கள். இல்லையேல் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகி காட்டுங்கள். அப்படி செய்தால் இந்த மேடையிலே தூக்கில் தொங்க தயார். இரண்டு அம்மாவாசைக்குள் இந்த ஆட்சி கலையும்.

    MLA Senthil Balaji criticised the State Govt. in Kovai

    இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    English summary
    Senthil Balaji criticised the State Govt. in Kovai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X