For Daily Alerts
Just In
சென்னையில் வெள்ளத்தால் கஷ்டப்படும் மக்களுக்காக நடமாடும் ஏடிஎம் வசதி
சென்னை: வெள்ளத்தின் நடுவே மக்கள் ஏடிஎம்களுக்கு அலைவதை தடுக்க, இந்தியன் ஓவர்சீஸ், கனரா, கரூர் வைசியா போன்ற வங்கிகள் நடமாடும் ஏடிஎம்களை அமைத்துள்ளன.
சென்னையில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில், மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. எனவே, மக்கள் கடைகளில் பொருட்களை வாங்கவோ வேறு செயல்பாடுகளுக்காகவோ, பணம் எடுக்க ஏடிஎம் அமைந்துள்ள இடங்களுக்கு செல்வதற்கு கஷ்டப்படுகிறார்கள்.
இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கரூர் வைசியா வங்கி போன்றவை ஆங்காங்கு வேன்கள் மூலம், ஏடிஎம் மிஷினுடன் நடமாடுகின்றன. வாடிக்கையாளர்கள் அதில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
Mobile ATM surrounding in chennai pic.twitter.com/wZXdIsjSMU
— Arun Zylo (@arunzylo7) December 6, 2015
Comments
English summary
Canara, IOB, and KVB Banks opened Mobile ATMs in Chennai.