For Daily Alerts
Just In
சென்னையில் பல இடங்களில் மழை.. புறநகர்களில் கடும் புழுக்கம்
சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் இன்று பிற்பகலுக்கு மேல் மிதமான மழை பெய்தது. அதேசமயம், புறநகர்களில் மழை இல்லை. மாறாக நல்ல வெயிலும், கடும் புழுக்கமும் ஏற்பட்டது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. பகல் முழுவதும் நல்ல காற்று வீசுகிறது. இரவில் அவ்வப்போது மழை பெய்கிறது.
இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் சென்னை நகரின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பட்டினப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, மடிப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான மழையைக் காண முடிந்தது.
இருப்பினும் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் மழை இல்லை. கடும் புழுக்கம்தான் நீடித்தது. அதேசமயம், காற்று வீசி வருவதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்துள்ளனர்.
Comments
English summary
There was a moderate rain in the inner parts of Chennai in the evening.
Story first published: Saturday, June 27, 2015, 16:21 [IST]