For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் இன்று ஏமாற்றிய மழை... லேசான சாரல்+ தூரல்தான்!

சென்னையில் மிதமான மழை பெய்தது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மிதமான மழை பெய்தது. நேற்று போல் இன்றும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. வால்பாறையில் கடந்த 5 தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும் பகுதிகளிலும் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கோடையில் மக்களை வாட்டி வதைத்த இந்த மழை கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது.

குளிர்ந்த வானம்

குளிர்ந்த வானம்

கடந்த சில நாட்களாகவே வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வெயில் வாட்டி வதைக்காமல் குளிர் நிலவ தொடங்கியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்தது.

கனமழை

கனமழை

நேற்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் தாழ்வான சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

மக்கள் அவதி

மக்கள் அவதி

தொடர் மழையால் போக்குவரத்து ஆங்காங்கே பாதிக்கப்பட்டது. ரயில் நிலையங்களை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்தனர். 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்தது.

ஏமாற்றிய மழை

ஏமாற்றிய மழை

வானிலை அறிவிப்பால் நேற்றை போல் இன்று நல்ல மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று காலை முதலே சில நேரம் மேகமூட்டத்துடனும் லேசான வெயிலுடனும் இருந்தது. இதையடுத்து 7 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது. சில இடங்களில் தூரல் மட்டுமே இருந்தது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

English summary
Moderate rain hits in Chennai and surrounding places. People expects good rain like yesterday, but it was very less shower.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X