For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பனியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் பனியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து விடாமல் சாரல் மழையாக பெய்து வருகிறது.

இந்திய பெருங்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலு இழந்தது. ஆனாலும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருந்தது.

Moderate rain in many parts of TN

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து தமிழகத்தில் பல இடங்களில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. கடலூர்,பெரம்பலூர், அரியலூரில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

அதேபோல் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனி காற்றுடன் மழை பெய்தது. மேலும் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

காலையில் இருந்து பெய்துவரும் மழை மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறத.

English summary
Moderate rain in many parts of Tamil Nadu. Rain starts pouring from morning in Ariyalur, Cuddalore, Perambalur, Dindugal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X