For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்கள் மோடி பிரசாரம்

By Mayura Akilan
|

சென்னை: பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து முறையாக கூட்டணி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Modi to Campaign for Three Days in TN From Sunday

இந்தநிலையில் நாளை தமிழகம் வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஞாயிறன்று மாலை 6 மணிக்கு மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

பிரசாரத்தை நிறைவு செய்து, 14ம் தேதி திங்கட்கிழமை அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு குஜராத் திரும்புகிறார்.

மீண்டும் 16ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும் கோவையிலும், 17ஆம் தேதி ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியிலும் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார் என்று சென்னையில் மேடவாக்கத்தில் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க வேட்பாளர் இல.கணேசன் தெரிவித்தார்.

English summary
National Democratic Alliance’s prime ministerial candidate Narendra Modi will be campaigning for the NDA candidates in Tamil Nadu for three days starting from Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X