தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்கள் மோடி பிரசாரம்
சென்னை: பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து முறையாக கூட்டணி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் நாளை தமிழகம் வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஞாயிறன்று மாலை 6 மணிக்கு மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
பிரசாரத்தை நிறைவு செய்து, 14ம் தேதி திங்கட்கிழமை அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு குஜராத் திரும்புகிறார்.
மீண்டும் 16ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும் கோவையிலும், 17ஆம் தேதி ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியிலும் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார் என்று சென்னையில் மேடவாக்கத்தில் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க வேட்பாளர் இல.கணேசன் தெரிவித்தார்.