போர்க்களமான ஆர்.கே.நகர்.. பிசியோ தெரபி மையத்தில் மூட்டை, மூட்டையாக பணம்.. ஆட்டோவை மடக்கிய திமுகவினர்
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகரில் பிசியோ தெரபி மையம் ஒன்றில் ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் அதிமுகவினர் இன்று தீவிர பணப்பட்டுவாடா செய்துவருவதாக திமுகவினரும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இதனிடையே தேர்தல் அதிகாரிகள், இன்று கொருக்குப்பேட்டையிலுள்ள பிசியோ தெரபி மையம் ஒன்றில் மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிசியோ தெரபி மையம்
இதுதொடர்பாக பிசியோ தெரபி உரிமையாளர் பச்சையப்பன் என்பவரிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர், அதிமுகவை சேர்ந்தவர் என திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
மூட்டை மூட்டையாக பணம்
பிசியோ தெரபி மையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்துமே ரூ.2000 நோட்டுகள் என தெரிகிறது. இரு கட்டைப்பைகளில் அவை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தனவாம்.
போர்க்களமானது
ஆங்காங்கு அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்துவருவதை பிற கட்சியினர் தடுத்து வருவதால் ஆர்.கே.நகர் போர்க்களமாகியுள்ளது.
ஆட்டோவை மடக்கினர்
ஆட்டோ ஒன்றில் பணம் கடத்தப்படுவதாக கூறி திமுகவினர் ஆட்டோவை முற்றுகையிட்டனர். அதை போலீசார் தடுத்தனர். அப்போது போலீஸ் அராஜகம் ஒழிக என திமுகவினர் கோஷமிட்டனர். கொருக்குப்பேட்டையில் திமுகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.