சிபிஐ ரெய்டில் ஆதாரங்கள்.. கார்த்தி சிதம்பரம் தொடர்புள்ள நிறுவனங்களுக்கும் சிக்கல்
சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பணம் கொடுத்த ஐஎன்எக்ஸ் மீடியா தவிர்த்து மேலும் பல நிறுவனங்களும் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் வர உள்ளன.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, வெளிநாட்டு நிதி வளர்ச்சி வாரியம் மூலம், முதலீடுகளை அனுமதிக்க லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மகன் கார்த்தி சிதம்பரத்தின், அட்வான்டேஜ் ஸ்டார்டஜிக் ன்சல்டிங் நிறுவனம் மற்றும் செஸ் மேனேஜ்மென்ட் நிறுவனங்களுக்கு லஞ்ச பணம் நிதியாக கைமாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சிதம்பரம் வீட்டிலும், கார்த்தி சிதம்பரம் அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, எஸ்சார் ஸ்டீல் லிமிட்டெட், விஎஸ்டிி டில்லர்ஸ்ஸ டிராக்டர்ஸ், டியாஜியோ ஸ்காட்லாந்து லிமிட்டெட் மற்றும் கர்தா குரூப் போன்ற 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கார்த்தி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக சிபிஐ சந்தேகிக்கிறது.
இந்த நிறுவனங்களிலும் இனி விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.