For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை புறநகரில் கனமழை… அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் சில தினங்களுக்கு முன் குறைந்த காற்றழுத்தம் உருவானது . அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

More rain expected on Tamil Nadu by next 24hours: Met

சில நாட்கள் வெயிலும் இடை இடையே மழையுமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவநிலை நிலவி வருகிறது. இதனிடையே இன்று அதிகாலை முதல் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர் உள்பட புறநகர் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரையிலான நிலவரப்படி கொடைக்கானலில் 6 செமீ, சாத்தனூர், தொழுதூர், கிருஷ்ணகிரி, திருத்தணியில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

English summary
The Met office here has forecast more rains in South Tamil Nadu, Puducherry during the next 24 as the North East monsoon has been active over the last few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X