தமிழக மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் மூழ்கியது.. 6 பேர் மீட்பு.. பல பேரின் நிலை?
நெடுந்தீவு தென்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு கடலில் மூழ்கி உள்ளது.
ராமேஸ்வரம்: நெடுந்தீவு தென்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு கடலில் மூழ்கி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த படகில் சென்று இருக்கிறார்கள். படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நெடுந்தீவு தென்கடலில் சென்ற போது படகு மூழ்கியது.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இலங்கை கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
ஆழக்கடல் பகுதி என்பதால் அங்கு மீட்பு பணி மிகவும் கடினமாக இருக்கிறது. மீதமுள்ள மீனவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.
இன்னும் சில மணி நேரத்தில் அங்கு இந்திய மீட்பு படை சென்று சேரும் என்று நம்பப்படுகிறது. 5க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மூழ்கி உள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். மற்ற மீனவர்களின் விவரம் இன்னும் வெளியாகவில்லை.