இந்த நாள் குஷ்புவுக்கு டல்லான நாள்: காரணம் தெரியுமா?
சென்னை: இந்த காலை இனிய காலையாக இருக்கவே முடியாது என்று நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு காலையில் எழுந்ததும் நம்பிக்கை அளிக்கும்படியாக நல்ல வார்த்தை கூறி ட்வீட் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவரது ட்வீட்டை பார்க்கும் ரசிகர்கள் சூப்பர் மேடம் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் என்பார்கள். இந்நிலையில் குஷ்பு இன்று காலை போட்ட ட்வீட்டில் உற்சாகமே இல்லை.
அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
பெண் சிங்கம் மற்றும் உண்மையான நண்பர் சோ ராமசாமியின் மறைவுக்கு பிறகு காலை இனிய காலையாக இருக்க முடியாது. வேறு இடத்தில் சந்தித்து மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
a mrng cannot be gud aftr d demise of a Lioness n her true friend #ChoRamasamy..dey hve chosen 2 mt at a dffrnt place n be happy #RIPChoAvl
— khushbusundar (@khushsundar) December 7, 2016
ஜெயலலிதாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.
Treasures...treasured moments..memories will remain forever.. pic.twitter.com/d4XhUVIXj9
— khushbusundar (@khushsundar) December 7, 2016