For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வத்தலகுண்டில் அதிர்ச்சி.. மூக்கு உடைந்த பெண்ணிற்கு தையல் போட்ட பிணவறை ஊழியர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    வத்தலகுண்டில் பெண்ணுக்கு தையல் போட்ட பிணவறை ஊழியர்

    திண்டுக்கல்: வத்தலகுண்டின் அருகே மூக்கு உடைந்த பெண்ணிற்கு பிணவறை ஊழியர் தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமீப காலமாக மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது அதிகரித்து வருகிறது.

    மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, தையல் போடுவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பீதியை கிளப்பி வருகிறது.

    பெண்ணுக்கு தையல்

    பெண்ணுக்கு தையல்

    இந்நிலையில் திண்டுக்கல் அருகே அரசு மருத்துவமனையில் பிணவறை ஊழியர் ஒருவர், காயம்பட்ட பெண்ணுக்கு தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிகிச்சையளிக்கும் வீடியோ

    சிகிச்சையளிக்கும் வீடியோ

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பிணவறை ஊழியர் சிகிச்சை அளிக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு மருத்துவமனை

    அரசு மருத்துவமனை

    கொடைக்கானல் அருகே கடந்த 29-ம் தேதி நடந்த விபத்தில் வேனில் சென்ற 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

    பிணவறை ஊழியர் சிகிச்சை

    பிணவறை ஊழியர் சிகிச்சை

    ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர், மதுரைக்கு கொண்டுசெல்லுமாறு தட்டிக் கழித்தார். இதையடுத்து வலியால் துடித்தவர்களுக்கு பிணவறை ஊழியர் கதற கதற முதலுதவி செய்தார்.

    அப்பகுதி மக்கள் கோரிக்கை

    அப்பகுதி மக்கள் கோரிக்கை

    பிணவறை ஊழியர் சிகிச்சை அளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிணவறை ஊழியர் அல்ல

    பிணவறை ஊழியர் அல்ல

    இதனிடையே நோயாளிக்களுக்கு சிகிச்சையளித்தவர் மருத்துவமனையின் பல்நோக்கு உதவியாளர் என்றும் அவர் பிணவறை ஊழியர் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    English summary
    Mortuary worker has given treatment to patients in Dindugul Vathalagundu govt hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X