அதானி குற்றவாளின்னா "அவரும்"தான்.. என்னை ஜெயில்ல புடிச்சி போடுவீங்களா? செய்ங்க! எம்பி ராசா ஆவேசம்
சென்னை: அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளிதான். இதை சொன்னதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தாலும் பரவாயில்லை, சிறை செல்ல நான் தயாராக உள்ளேன் என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
கவுதம் அதானியின் அதானி குழு முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த நிறுவனம் நிறைய வரி ஏய்ப்பு செய்ததாகவும் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் அறிக்கை வெளியானது.
இந்த அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அது போல் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால் மத்திய அரசு இதை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது காங்கிரஸ் எம்பியாக இருந்த ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில் அதானி நிறுவனத்தில் ரூ 20 ஆயிரம் கோடி முதலீட்டை யார் செய்தது. அந்த நிறுவனத்திற்கு சீன நிறுவனத்துடன் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் அதானி நிறுவனம் ஈடுபட்டதாகவும் ராகுல் பேசியிருந்தார். மேலும் அதானி விவகாரத்தை பிரதமர் மோடி பேச தயங்குவது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றம் அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த கூட்டத் தொடர் கூச்சல் குழப்பத்துடன் இருந்தது. இதையடுத்து ராகுல் காந்திக்கு வேறு ஒரு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. இதன் மூலம் அவரது எம்பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
தகுதி நீக்கத்திற்கு எதிராக ராகுல் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா கட்சி பொதுக் கூட்டத்தில் பேசினார். அவர் கூறுகையில் அதானி விவகாரத்தில் ரூ 10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர்.

பாஜக எம்பிக்கள் 350 பேர் காவி துண்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் 39 பேர் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்தோம். அவர்களால் பதில் அளிக்கவே முடியவில்லை. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவற்றுக்கு அஞ்சி மம்தா பானர்ஜி, கே சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் யாரும் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை.
ஆனால் இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக் கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளிதான். இதை சொன்னதற்காக கூட என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்கு செல்ல தயாராகவே உள்ளேன். இவ்வாறு ஆ. ராசா பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு கட்சித் தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அதானி விவகாரத்தை ராகுல்காந்தி கையிலெடுத்து இன்று எம்பி பதவியை இழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்.. மநீம இன்று அவசர கூட்டம் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட்











Click it and Unblock the Notifications