வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்கி ஆய்வு செய்த முதல்வர் பழனிச்சாமி!
முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டு இருந்த பகுதிகளை ஆற்றில் இறங்கி நேரில் பார்வையிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Recommended Video
திருச்சி: முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டு இருந்த பகுதிகளை ஆற்றில் இறங்கி நேரில் பார்வையிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
காவிரியில் வந்த வெள்ளம் காரணமாக நேற்று முதல் நாள் இரவு முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால் தற்போது காவிரி நீர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது கொள்ளிடம் வழியாக அதிக நீர் கடலில் கலக்கிறது.
கடந்த 180 ஆண்டுகளாக இந்த அணைதான் டெல்டா பாசனத்திற்கு உதவியது. இந்த அணை உடைந்த காரணத்தால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணையை பார்வையிட்டார்.
நேரடியாக ஆற்றில் இறங்கி முதல்வர் பழனிசாமி சேதங்களை பார்வையிட்டார். உடைந்த மதகுகளை கீழே இறங்கி நேரில் பார்த்தார் முதல்வர். எந்த பகுதியில் மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுகிறது என்று பார்த்தார்.
மதகுகள் அடித்துச் செல்லப்பட்ட இடம் அருகே வரை போய் நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர்கள் காமராஜ், கே.சி.வீரமணி, அதிகாரிகள் அவர் உடன் இருந்தனர். விரைவில் இந்த பாதிப்பு சரி செய்யப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.