For Daily Alerts
Just In
கேரளாவில் தொடர் கனமழை.. 136 அடியை எட்டியது முல்லைபெரியாறு அணை!
கேரளாவில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டி உள்ளது.
Recommended Video
136 அடியை எட்டியது முல்லைபெரியாறு அணை!-வீடியோ
தேனி: கேரளாவில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டி உள்ளது.
முல்லை பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.
இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி, உயரம் 155 அடி ஆகும்.
முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடியாகும்.
இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி அணை நிரம்பியுள்ளது.
இந்நிலையில் தொடர்மழை காரணமாக முல்லைபெரியாறு அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 136 அடியை எட்டியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
Comments
English summary
Mulllai periyaru dam reaches 136 ft. Heavy rain Kerala.