உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மக்களின் வாழ்க்கையில் பாதிப்பு: தா.மோ அன்பரசன்
சட்டசபையில் இன்று உள்ளாட்சித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.
சென்னை : தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் திமுக எம்.எல்.ஏ. தா.மோ அன்பரசன் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி கூடிய சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை திமுக சட்டசபையில் பங்கேற்காது என்று அறிவித்தார்.
அதனையடுத்து, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை , பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, கால்நடை பராமரிப்பு மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை ஆகிய துறைகளின் மீதான விவாதங்களில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
சட்டசபையில் பேசிய திமுக எம்.எல்.ஏ தா.மோ.அன்பரசன். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.