ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கும் ஜி.வி.பிரகாஷ்! சேலம் ஆத்தூரில் இன்று போராட்டத்தில் பங்கேற்பு!!
சேலம், ஆத்தூரில் தடையை மீறி இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வர உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் தானும் களத்தில் இறங்கி போராட உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மாடு பிடி
சென்னை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் தானும் களத்தில் இறங்கி போராட உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீரர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திரையுலகினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
கொம்பு வச்ச சிங்கம்டா என்ற ஜல்லிக்கட்டு பாடலையும் வெளியிட்டு இருக்கிறார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் தானும் களத்தில் இறங்கி போராட உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இன்று (17.01.17) சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வர இருப்பதாகவும், களத்தில் சந்திப்போம் என்றும் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். மேலும், சிலர் இந்த போராட்டம் ஜனவரி மாதத்தோடு ஓய்ந்துவிடும் என்கிறார்கள். கண்டிப்பாக இருக்காது.
இந்த மாதம் மட்டும் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எனது போராட்டம் தொடரும். நான் மட்டுமல்ல எனது நண்பர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) January 16, 2017