For Daily Alerts
Just In
பக்ரீத்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தியாக திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே சென்னை, மதுரை, கோவை, நெல்லை உட்பட பல்வேறு நகரங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி இறைவனை வழிபட்டனர்.
நாகூர் தர்க்காவில் 1000த்திற்கும் மேல் கூடிய இஸ்லாமியர்கள் கூட்டாக தொழுகை நடத்தினர். ஏழ்மையிலுள்ளவர்களுக்கு, வசதி படைத்தவர்கள் சாப்பிட உணவும், ஆடைகளும் கொடுத்து மகிழும் நாள் பக்ரீத் ஆகும்.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
English summary
Muslims offer special prayers as today EidAlAdha is celebrating across the world.