ரஜினிகாந்த் என் நண்பர், நல்ல முடிவை எடுப்பார்: தங்கபாலு புது பிட்
சென்னை: ரஜினிகாந்த் என் நண்பர். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. வி. தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக அரசுக்கு அளித்த நிதியை விட அதிமுக அரசுக்கு மத்திய அரசு அதிக நிதியை வழங்கியுள்ளது. ஊரகத் துறையில் தமிவகத்திற்கு கூடுதல் நிதி வழங்கியுள்ளதை அந்த துறையின் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டி ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார்.
சில்லரை வணிகம் பாதிக்கப்பட்டுவிடாமல் இருக்கும் வகையில் தான் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரிய தொழில்களை கைவிட்டுவிட முடியாது. காங்கிரஸ் கட்சி யாருக்கும் பணம் கொடுக்க வாக்குகளை வாங்காது. வாக்காளர்களுக்கு யார், யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே குழப்பம் ஒன்றும் இல்லை. எந்த கட்சியில் குழப்பம் இல்லாமல் இருக்கிறது சொல்லுங்கள்?. நடிகர் ரஜினிகாந்த் என் நண்பர். அவர் தேசபக்தி மிக்கவும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என்றார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினியின் ஆதரவை ஒரு சில கட்சிகள் எதிர்பார்ப்பதும், அவர் அமைதி காப்பதும் வழக்கமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.