For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அய்யோ.. எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேர பிள்ளைகளுக்கு.. கதறும் அபிராமியின் தந்தை!

எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேரப் பிள்ளைகளுக்கு, இன்று நான் கொள்ளி போடும் நிலைமை வந்து விட்டதே என தலையில் அடித்துக்கொண்டு கதறுகிறார் அபிராமியின் தந்தை சவுந்தரராஜன்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளைக் கொன்ற அபிராமியின் தந்தை கண்ணீர் பேட்டி- வீடியோ

    சென்னை: எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேரப் பிள்ளைகளுக்கு, இன்று நான் கொள்ளி போடும் நிலைமை வந்து விட்டதே என தலையில் அடித்துக்கொண்டு கதறுகிறார் அபிராமியின் தந்தை சவுந்தரராஜன்.

    ஒரு பெண்ணின் முறையற்ற உறவு, காமவெறி, உல்லாச வாழ்க்கை உள்ளிட்டவற்றால் ஒரு குடும்பமே சின்னாபின்னமாகி சீரழிந்துள்ளது. தாயின் காம வெறிக்கு இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளன.

    வீட்டில் பட்டாம்பூச்சி போல் சுற்றி திரிந்த குழந்தைகள் தாயின் கையால் விஷம் கொடுத்தும் மூச்சு திணறடிக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்களின் பேரக்குழந்தைகளை பெற்ற மகளே கொன்றதை நினைத்து நினைத்து கதறுகின்றனர் அபிராமியின் பெற்றோர்.

    குழந்தைகளை தவிக்கவிட்டு

    குழந்தைகளை தவிக்கவிட்டு

    மகளின் கொடூர செயலால் வேதனைக்கும் அவமானத்திற்கும் ஆளான அபிராமியின் தந்தை பேரக்குழந்தைகள் துடிதுடிக்க கொல்லப்பட்டதை நினைத்து கதறி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2 மாதத்துக்கு முன்பு சுந்தரத்துடன் அபிராமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பகூட தனது இரண்டு பிள்ளைகளையும் தவிக்க விட்டுவிட்டு சுந்தரத்தின் வீட்டில் போய் இரண்டு நாட்களாக தங்கி விட்டாள்.

    அடித்து உதைத்தேன்

    அடித்து உதைத்தேன்

    அபிராமி-சுந்தரம் உறவு குறித்து எனக்கு தெரிய வந்தபோது, நான் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று, அபிராமியை அடித்து உதைத்து, அறிவுரை கூறி, மீண்டும் கணவனுடனேயே சேர்த்து வைத்தேன். அப்பொழுதே நான் சுந்தரம் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தால், இன்று இவ்வளவு பெரிய கொலை சம்பவம் நடந்து இருக்காது.

    கேட்டு கொண்டே இருக்கிறது

    கேட்டு கொண்டே இருக்கிறது

    நானும் எனது பேரப் பிள்ளைகள் இரண்டையும் இழந்து தவித்திருக்க மாட்டேன். எனக்கு இப்போது அபிராமியை பற்றித் துளிகூட கவலையில்லை. ஆனால் பேரப் பிள்ளைகளை நினைத்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இப்பொழுதும் எனது பேரப்பிள்ளைகள் இரண்டும் தாத்தா தாத்தா என்று என்னை அழைப்பது என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

    பேராசை, உல்லாச போக்கு

    பேராசை, உல்லாச போக்கு

    நான் பெற்ற மகளே தனது இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமாக கொலை செய்வாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவளது பேராசை மற்றும் உல்லாசப் போக்கால்தான் இந்த அளவுக்கு கொடூர மனம் வந்து விட்டது.

    எனக்கு கொள்ளிபோட வேண்டிய

    எனக்கு கொள்ளிபோட வேண்டிய

    பெண் பிள்ளைகளை கண்டித்து வளர்க்காத பெற்றோருக்கு, இது ஒரு பாடமாக இருக்கும். வயதான காலத்தில் என் இறப்பிற்குப் பிறகு, எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேரப் பிள்ளைகளுக்கு, இன்று நான் கொள்ளி போடும் நிலைமை வந்து விட்டது. என் நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது. இவ்வாறு கூறி அவர் கதறி அழுதார் அபிராமியை பெற்ற சவுந்தரராஜன்.

    English summary
    Abirami father says my situation should not come for even my enemies. Soundarrajan daughter Abirami killed her two children by giving sleeping pills.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X