For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்பிரமணிய சாமிக்கு என் மகனே அழகாக பதில் சொல்லியுள்ளார்.. துரை தயாவை மெச்சிய அழகிரி!

சுப்பிரமணிய சாமி ஒரு மன நோயாளி என துரை தயாவை போல அவரது தந்தையான அழகிரியும் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுப்பிரமணிய சாமிக்கு என் மகனே அழகாக பதில் சொல்லியுள்ளார் - அழகிரி

    மதுரை: சுப்பிரமணிய சாமி ஒரு மன நோயாளி என துரை தயாவை போல அவரது தந்தையான அழகிரியும் தெரிவித்துள்ளார்.

    வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் தனது வெயிட்டை காட்ட பேரணி நடத்தவுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பேரணி குறித்து ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் அழகிரி. இன்று இரண்டாவது நாளாக மதுரையில் ஆலோசனை நடத்தினார் அழகிரி.

    அழகாக பதில் சொல்லியுள்ளார்

    அழகாக பதில் சொல்லியுள்ளார்

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், சுப்பிரமணி சாமியின் இட்லி கடை கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அழகிரி, சுப்பிரமணிய சாமிக்கு என் மகனே அழகாக பதில் சொல்லியுள்ளார். சுப்பிரமணிய சுவாமி ஒரு மனநோயாளி அவர் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. அதையே தான் நான் கூறுகிறேன் என்றார்.

    துரை தயாநிதி பதில்

    துரை தயாநிதி பதில்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ் சுப்பிரமணிய சாமி குறித்து கேட்ட கேள்விக்கு மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை , அதுவே காரணம் என கோபமாக பதிலளித்திருந்தார் துரை தயாநிதி என்பது நினைவு கூறத்தக்கது.

    விரும்பவில்லை

    விரும்பவில்லை

    மேலும் திமுக குறித்த கேள்விக்கு பதிலளித்த அழகிரி, திமுகவில் நான் தற்போது இல்லை. ஆதாலால் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

    அமைச்சரிடமே கேட்டு சொல்லுங்கள்

    அமைச்சரிடமே கேட்டு சொல்லுங்கள்

    அமைச்சர் ஆர்பி உதயக்குமார் திருமங்கலம் பார்முலா என கூறியது தொடர்பான கேள்விக்கு, திருமங்கலம் பார்மலா என்றால் என்ன என்று வருவாய் துறை அமைச்சரிடமே கேட்டு சொல்லுங்கள் என்றார்.

    ஒப்பந்த உறவுகள்

    ஒப்பந்த உறவுகள்

    திமுக அதிமுக உறவு என்று தினகரன் சொல்லியுள்ளது ஒப்பந்த உறவுகள் ஆகும் என்றும் அழகிரி கூறினார். அழகிரியின் ஒவ்வொரு கருத்தும் தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    MK Azhagiri says My son has beautifully answered for Subramaniya Samy. MK Azhagiri meets press in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X