For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன்.. மைலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் போர்க்கொடி

கட்சித்தாவல் சட்டம் பாய்ந்தாலும் கவலையில்லை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்கு அளிப்பேன் என்று மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ நடராஜ் கூறியுள்ளார். கட்சித்தாவல் சட்டம் பாய்ந்தாலும் கவலையில்லை என்றும் கூறியுள்ளார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் நடராஜ் கூறியுள்ளார்.

தங்களுக்கு 124 எம்எல்ஏக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 123 ஆக குறைந்துள்ளது. தனது எம்எல்ஏ பதவியே பறிபோனாலும் பரவாயில்லை. நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே வாக்களிப்பேன் என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார் நடராஜ் எம்எல்ஏ.

Mylapore MLA Natraj opposes Edappadi Palanisamy

அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று தான் எதிர்பார்பபதாகவும் ஒருங்கிணைந்த அதிமுகவிற்கே தனது ஆதரவு என்று கூறி வந்தார் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜ் எம்எல்ஏ, மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதுதான் ஒரு சட்டசபை உறுப்பினரின் கடமை என்று கூறினார். அந்த வகையில் நான் மக்களின் பக்கமே நிற்கிறேன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஓபிஎஸ் அணிக்கு மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் ஆதரவு அளித்துள்ளதன் மூலம் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

English summary
Mylapore MLA Natraj has opposed CM Edappadi Palanisamy and has declared that he will vote against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X