தூத்துக்குடி என். பெரியசாமி மரணம்.. கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்… திமுக 3 நாள் துக்கம் அனுசரிப்பு
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். அவரது இறப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என திமுக தலைமையகம் அறிவித்துள்ளது.
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். அவரது இறப்பிற்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
தட்டார்மடத்தைச் சேர்ந்த பெரியசாமி திமுகவில் தொடர்ந்து 25 ஆண்டு காலம் மாவட்டச் செயலாளராக இருந்தவர். 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிகளில் வெற்றி பெற்று இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர்.
நுரையீரல் பிரச்சனைத் தொடர்பாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமையகம், என். பெரியசாமி மறைவிற்கு திமுக 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாகவும், 3 நாட்களுக்கு திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் திமுகழகம் அறிவித்துள்ளது.