For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே நகர்: விறுவிறுப்பான பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம்

ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், நாம் தமிழர் கட்சி தங்களது பிரசாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் டிசம்பர 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Naam Tamilar Party Cadres and candidate Campaigning hardly in RK Nagar

முக்கிய கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த 29ம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானோடு வந்து இரட்டை மெழுவர்த்தி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தீவிரமாக பிரச்சாரங்களை ஆர்.கே நகரில் முன்னெடுத்து வருகிறது. அ.தி.மு.க ஆட்சியின் அவலங்களையும், தற்போது மத்தியில் இருக்கும் பா.ஜ.க ஏற்படுத்தி வரும் குழப்பங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி, பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்றோடு இரண்டு நாள் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இன்று காலையில் இருந்தே வீடுவீடாக சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

English summary
Naam Tamilar Party Cadres and candidate Campaigning hardly in RK Nagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X