கர்நாடக வங்கி, சங்கீதா ஓட்டல் முற்றுகை... நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூருவில் நடைபெறும் போராட்டங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் கர்நாடக வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி பிரச்சனையால் ஏற்பட்ட கலவரம் உச்சக்கட்டதை அடைந்து பெங்களுரில் பெருமளவில் தமிழர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாட்டில் சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள கர்நாடக வங்கியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் சங்கீதா ஓட்டலுக்குள் நாம் தமிழர் கட்சியினர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க, தமிழகத்தில் கன்னட அலுவலகங்கள், பள்ளிகள், கன்னட நடிகர்களின் வீடுகள் என அனைத்திற்கும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியினர் சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.