நாங்கள் பிரபாகரன் வாரிசுகள் எதையும் செய்வோம் – சீமான் பேச்சு
மயிலாடுதுறை: மீத்தே எரிவாயு எடுப்பதை கர்நாடக அரசு தடுக்காவிட்டால், நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் எதையும் செய்ய தயங்க மாட்டோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மீத்தேன் எரிவாயு எடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு காவரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இரண்டு இடங்களில் கட்டப்போகும் அணைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அங்கு அவர் பேசியதாவது "மீத்தேன் எடுப்பதற்கு அனுமதி வழங்கிய காங்கிரஸை அப்புறப்படுத்தி விட்டோம். புதிதாக ஆட்சியேற்றிருக்கும் பி.ஜே.பி அரசு புதுப்பிக்க நினைத்தால் அவர்களையும் அகற்றுவோம்.
அதை விட்டு விட்டு க்ளீன் இண்டியா என்று சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்டு வெற்றி பெற்று விடலாம் எனக் கனவு கண்டு வீதியில் ஓட்டு கேட்டு வந்தால் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து வந்து இங்குள்ள நிலைமையை உணர செய்வோம்.
நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள். எதையும் செய்ய தயங்க மாட்டோம் என்று பேசினார் சீமான்.