For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டனம்.. நெல்லையில் நாளை, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.. சீமான் பங்கேற்பு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை நெல்லையில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

நெல்லை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22ம் தேதி நடைபெற்ற 100வது நாள் போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

Naam Tamilar will demonstrate tomorrow in Nellai on Thoothukudi firing

மேலும் பலர் குண்டடிபட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அரசபயங்கரவாதத்தைக் கண்டித்து நாளை காலை 10 மணியளவில், நெல்லை ரயில் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் சீமான் கண்டன உரையாற்ற உள்ளார்.

English summary
Naam Tamilar Demonstration tomorrow at Nellai on Thoothukudi firing. Naam Tamilar Party Chief Coordinator Seeman attending the Demonstration at Nellai tomorrow .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X