ஓட்டுக்கு பணம் தராமல் ’நாம் தமிழர்’ வாங்கிய ஓட்டுகள்- பகல் 2.30 மணி நிலவரம்!
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் வாக்குக்குப் பணம் கொடுக்காமல், பணக்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்தாமல் எளிய வீட்டு பிள்ளைகளை நிறுத்திய நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் வாங்கியிருக்கிறது.
வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது எத்தனை கோடிகள் செலவு செய்ய முடியும்? என்றுதான் பிரதான அரசியல் கட்சிகள் கேள்வி கேட்கும். அதேபோல் வாக்குக்கு பணம் கொடுப்பதையும் அரசியல் கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என பிரகடனம் செய்து மக்களில் ஒருவரை களப்பணி செய்யக் கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தி மாற்று அரசியலை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி. பணபலம் படைத்த பெரும் கட்சிகளை நாம் வெல்லப் போவது இல்லை என்று தெரிந்தும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் பகல் 2.30 மணி நிலவரப்படி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்கு விவரம்:
அரக்கோணம்- 9973 ; ஆரணி 22,528; மத்திய சென்னை- 15,048; வடசென்னை- 21,623; தென் சென்னை- 14, 263; சிதம்பரம் 11,142; கோவை- 22,393; கடலுர்- 12,704; தருமபுரி- 7856; திண்டுக்கல் 25262, ஈரோடு= 34.281
கள்ளக்குறிச்சி 16,845; காஞ்சிபுரம்- 43,705; கன்னியாகுமரி 6,195; கரூர்- 16,445; கிருஷ்ணகிரி 13,740; மதுரை-12,061; மயிலாடுதுறை- 14,829; நாகை- 25,231; நாமக்கல்- 20, 941
பெரம்பலூரி- 36,785; பொள்ளாச்சி 20,291; ராமநாதபுரம்- 10,180; சேலம்- 10,864; சிவகங்கை 21,554; ஸ்ரீபெரும்புதூர்- 11,753; தென்காசி 39,111; தஞ்சாவூர்- 22, 693; தேனி- 7120;
திருவள்ளூர்- 17,210; தூத்துக்குடி-21, 712; நெல்லை- 36,353; திருச்சி- 45, 692; திருப்பூர்- 24,438; திருவண்ணாமலை- 18, 569; விழுப்புரம்- 15,097; விருதுநகர்- 37,929