நாளை நடிகர் சங்கத் தேர்தல்... பக்காவான ஏற்பாடுகள்... பாதுகாப்பு வசதிகள்... !
சென்னை: எந்த ஆண்டும் இல்லாத முக்கியத்துவத்துடன் நாளை நடக்கும் நடிகர் சங்கத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பக்காவாக செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடக்கும் செயின்ட் எப்பாஸ் பள்ளியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது மாநகர காவல் துறை.
நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் நடக்கும் இந்தத் தேர்தலில் ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் வாக்களிக்கப் போவதால், இன்று இரவிலிருந்தே பாதுகாப்புகளைச் செய்துள்ளனர். மொத்தம் 2000 பேருக்கு மேல் நாளை வாக்களிக்க உள்ளனர்.
இந்த ஏற்பாடுகளை சரத்குமார் அணியினரும் விஷால் அணியினரும் நேரில் போய் பார்வையிட்டனர்.
தேர்தல் காலை 7 மணிக்கே தொடங்குகிறது. கூட்டத்தைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே ரஜினி வந்து வாக்களிப்பார் என்று தெரிகிறது.
இந்த நடிகர் சங்க தேர்தல் தொடர்பான செய்திகள், நட்சத்திரங்கள் வாக்களிப்பது, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் என அனைத்தையும் லைவ்வாக ஒன்இந்தியாவில் நாளை தருகிறோம்.
காத்திருங்கள்!