For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய அளவில் இதுதான் தலைப்பு செய்தி.. பரபரப்பை ஏற்படுத்திய கோபால் கைது!

நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நக்கீரன் கோபால் கைது- வீடியோ

    சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

    யார் அளித்தது

    யார் அளித்தது

    முக்கியமாக நேரடியாக ஆளுநர் பெயரில் இந்த புகார் அளிக்கப்படவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்துதான் புகார் சென்றுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து, ஆளுநரின் செயலாளர் ஒருவர் மூலம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.

    [நக்கீரன் கோபால் கைது ஏன்.. இந்த கட்டுரைதான் காரணமா? ]

    முதல்முறை இப்படி

    முதல்முறை இப்படி

    முதல்முறை தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. ஆளுநர் மாளிகை பத்திரிக்கையாளர் ஒருவரை கைது செய்ய சொல்லி புகார் அளிப்பதும், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படுவதும் இதுவே முதல்முறையாகும்.

    தேசிய அளவில் கவனம்

    தேசிய அளவில் கவனம்

    இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைது தேசிய அளவில் வைரல் ஆகியுள்ளது. இவர் இந்தியா முழுக்க எல்லோருக்கும் தெரிந்த பத்திரிக்கையாளர் என்பதாலும், முக்கியமான இதழ் ஒன்றின் ஆசிரியர் என்பதாலும் இந்த செய்தி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் இதை அதிக கவனத்துடன் எழுதி வருகிறது.

    மீண்டும் பரபரப்பு

    மீண்டும் பரபரப்பு

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் இப்போதுதான் கொஞ்சம் அமைதியானது. தற்போது இந்த கைது காரணமாக இந்தியா முழுக்க அந்த செய்தி குறித்து தகவல் சென்று வருகிறது. பல ஆங்கில, இந்தி ஊடகங்கள் நிர்மலா தேவி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

    English summary
    Nakkheeran Gopal arrested in Chennai airport. Nakkheeran Gopal becomes the headlines of National Media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X