For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நக்கீரன் கோபால் உருக்கம்!!

சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நக்கீரன் ஆசிரியர் கோபால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சங்கரின் கனவை அனைவரும் சேர்ந்து நனவாக்க வேண்டும்- நக்கீரன் கோபால்- வீடியோ

    சென்னை: சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நக்கீரன் ஆசிரியர் கோபால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு பேரிழப்பு என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Nakkheeran Gopal condoles for Shankars death

    இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சங்கரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான நல்லகவுண்டம்பாளையம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    [பரந்து விரிந்த பயிற்சி மையங்கள்.. இனி சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்தப்போவது யார்?]

    நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் பணியில் உள்ளனர். சங்கரின் மரணத்தை களங்கப்படுத்த வேண்டாம். சங்கரின் கனவை அனைவரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். இவ்வாறு நக்கீரன் கோபால் தெரிவித்தார்.

    English summary
    Nakkheeran Gopal condoles for Shankar IAS acadamy Shankar's death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X