"ஜெ ஜெயலலிதா என்னும் நான்"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா?... நமது அம்மா கேள்வி
ஜெயலலிதா என்ற ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா என நமது அம்மாவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா என்னும் நான்- இந்த ஒற்றைக் குரல் எழுந்து வந்து மீண்டும் ஒலிக்காது என்பதால்.... ரஜினி, கமல், தினகரன், இயக்குநர்களுக்கெல்லாம் தைரியம் வந்துவிட்டது என நமது அம்மாவில் கவிதை எழுதப்பட்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள நமது அம்மா நாளிதழில் ஏக்கத்தில் தமிழகம் என்ற தலைப்பில் வெளியான கவிதை நடை பின்வருமாறு:
"ஜெ ஜெயலலிதா
என்னும் நான்"
இந்த
ஒற்றைக்குரல்
எழுந்துவந்து
மீண்டும்
ஒலிக்காது
என்பதால்...
நாட்டை விட்டே
வெளியேறுவேன்
என
ஊளையிட்ட
கோழைக்கும்
மையம்
தொடங்கும்
மனத் தைரியம்
வருகிறது...
உச்ச நட்சத்திர
நடிகருக்கும்
கட்சி
தொடங்கும்
உத்வேகம்
பிறக்கிறது...
அமீர்- பாலா
கரு.பழனியப்பன்-
கௌதமன்-
என்றெல்லாம்
பட வாய்ப்பு
இல்லாத
இயக்குநர்
எல்லாம்
தாடிவிட்டுக்
கொண்டுப
தமிழினப்
போராளி
வேஷம் கட்டும்
வேடிக்கை
பிறக்கிறது...
பாரதிராஜா
பார்த்திபன்
இப்படி
பழங்கால
இயக்குர்களும்
பத்து நாளுக்கு
ஒரு முறை
பத்திரிகையாளர்
சந்திப்புகள்
நடத்தி
பயாஸ்கோப்
காட்டும்
பரிதாபம்
நடக்கிறது...
எட்டு வழிச்
சாலை
போட்டால்...
எட்டு பேரை
வெட்டுவேன்
என்றெல்லாம்
எகத்தாளம்
பேசி
மிரட்டுகிற
மமதை
மன்சூர்
அலிகானுக்கும்
மண்டையில்
உதிக்கிறது...
ஒரு சேலை
இல்லாத
தைரியத்தில்
ஆலையை
மூடு
சாலையை
மூடு
என்றெல்லாம்
சமூக
ஆர்வலர்கள்
என்னும்
போர்வையில்
சவடால் பேசும்
சங்கதியும்
தொடர்கிறது...
பெண்ணினத்தை
இழிவாய்
பேசும் துணிச்சல் எஸ்வி சேகருக்கு...
டிராபிக்
ராமசாமி
என்னும் பேரில்
சினிமா
எடுக்கும் ஆசை
எஸ்.ஏ.சந்திரசேகருக்கு
இப்படி....
தாயே
நீங்கள் இல்லா
தமிழகத்தில்
தங்கப் பல்
கட்டிக் கொண்டவன்
உதிர்ப்பதெல்லாம்
பொன்மொழி
என்னும்
போக்கில்...
அது மட்டுமா
தமிழ்நாட்டு
எல்லைக்குள்
தலைகாட்டவும்
அஞ்சி நடுங்கி
பாண்டிச்சேரி
பக்கமா
பதுங்கிக்
கிடந்தவர்களுக்கும்
ஈரிலைச்
சின்னத்தை
எதிர்த்து
நிற்கிற
இறுமாப்பு
ஏகத்துக்கும்
எனும் போது...
வங்கத்து
கடலோரம்
துயில் கொண்ட
எங்கள்
தங்கத்து
தாரகையே...
இந்த
கோமாளிக்
கொட்டங்கள்
அடக்கவே
ஓர் நாள்
கோட்டைக்கு
வந்து போகக்
கூடாதா...
ஏக்கத்தில்
தமிழகம்...
என்று பாரபட்சம் இல்லாமல் ரஜினி, கமல், இயக்குநர்கள் அமீர், பாரதிராஜா, கரு பழனியப்பன், சீமான், டிராபிக் ராமசாமி, தினகரன், மன்சூர் அலிகான், வைகோ, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரை விமர்சித்துள்ளனர்.