'நமது எம்ஜிஆர்' அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை.. முதல்முறையாக ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி!
நமது எம்ஜிஆர் நாளிதழ் அதிமுகவின் அதிகரப்பூர்வ நாளிதழ் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: நமது எம்ஜிஆர் நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக தெரிவித்துள்ளார். நமது எம்ஜிஆரின் கருத்து அதிமுகவின் கருத்துதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
நமது எம்ஜிஆர் நாளிதழ் 30-வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நமது எம்ஜிஆரின் கருத்து அதிமுகவின் கருத்துதான் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ள.
இரட்டை இலைச் சின்னம் முடக்கம், ஆர்கே நகர் இடைத்தேர்தல் மற்றும் இரட்டை இலைச்சின்னத்துக்காக டிடிவி தினகரன் கைது உள்ளிட்ட பிரச்சனைகளின் போது தமிழக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் வாய்திறக்காமல் மவுனம் காத்து வந்தனர். ஆனால் நமது எம்ஜிஆர் நாளேடு மத்திய அரசை விமர்சித்து வெளுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.