'கவட்டை'யை வைத்து வெளவால் வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம்
நாமக்கல்: நாமக்கல் வனப்பகுதியில் உண்டிவில் மூலம் வெளவால் வேட்டையாடிய மூன்று பேருக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் அடுத்த கொல்லிமலை வனப்பகுதியிலுள்ள நடுகோம்பை பகுதியில் பழந்திண்ணி வவ்வாலை வேட்டையாடுவதாக நாமக்கல் மாவட்ட வன அலுவலர் குணசேகரனுக்கு தகவல் வந்தது.
அவரது உத்தரவின் பேரில் வனச்சரகர் கனகரத்தினம் தலைமையில் வனவர் மாணிக்கம், தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் உண்டிவில்லை வைத்துக்கொண்டு, பழந்திண்ணி வவ்வால்கøளை வேட்டையாடுவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிங்களாந்தபுரம் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த முருகேசன், அருள்குமார், தியாகராஜன் ஆகிய மூவரை பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா 4,000 ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.