For Daily Alerts
Just In
நாமக்கல் பள்ளிகள் கோழிப்பண்ணை போல் செயல்படுகின்றன.. நீதிபதி கிருபாகரன் தாக்கு!
நாமக்கல் அருகே கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாமக்கல் பள்ளிகள் கோழி பண்ணைகளாக செயல்படுகின்றன | முட்டை கொள்முதலில் 5000 கோடி ஊழல்
வடலூர்: நாமக்கல் அருகே கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சமூகம் சார்ந்த பல்வேறு வழக்குகளில் பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கடலூர் அருகே வடலூரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி கிருபாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தனியார் பள்ளிகளை சரமாரியாக சாடினார்.
அவர் பேசியதாவது, நாமக்கல் அருகே திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுகின்றன .
பல லட்சங்கள் கொடுத்து மருத்துவர், இன்ஜினியராக வேண்டும் என குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர். கனவு கலையும்போது மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.
Comments
English summary
Justice Kirubakaran says Namakkal schools are functioning like poultry. He said this in Vadlur book fair function.
Story first published: Saturday, July 14, 2018, 15:10 [IST]