For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமீதா சொல்லும் பாதி உண்மை எதைப்பற்றி புரியுதா மக்களே?

பிக்பாஸ் வீட்டை பைவ் ஸ்டார் சிறை என்று கூறி நமீதா இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பாதி உண்மை' என்று ஆங்கிலத்தில் கவிதை எழுதியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பாதி உண்மை' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி பதிவிட்டுள்ளார்.

நீங்கள் யாரும் அந்த நிகழ்ச்சியை கவனிக்கவில்லை. பார்க்கமட்டும்தான் செய்தீர்கள் இதை அவர் கையால் எழுதி, கீழே கையெழுத்தும் போட்டுள்ளார்.

Namitha slams Oviya a 'hell-hole' in cryptic poem

அந்த கவிதையில்

நீ காலையில் சிரிப்போடு எழுவாய்,
ஆனால் உன்னை ஒரு பெண் தூண்டிவிட்டு ஆத்திரத்தை வரவழைப்பாள்
சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அந்த நாளை தொடங்கலாம் என்று போவாய்.
அதே பெண் மீண்டும் அடிப்பாள்

ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாகச் சுருக்க முடியும்.
ஆனால், அப்படிச் சுருக்கும்போது அதன் உண்மைகள் மாறும்.
இது பாதி உண்மை தான்.

நீங்கள் அனைவரும் பார்த்த அந்தப் பாதியும் தப்பான பாதிதான்.
நீங்கள் என்னை ஜட்ஜ் பண்ணியது எனக்காகக் காட்டப்பட்ட வேடத்தைதான்.
அந்த நிகழ்ச்சி இயக்குநர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள்.
என்று தனது பதிவில் வேதனையை கொட்டியுள்ளார் நமீதா.

தனது பதிவின் கீழே, உண்மைதான் உன்னை வெளிக்கொண்டுவரும், அதுவரை கம்பீர முகத்தோட சிரி. உங்களால் வரிகளுக்கிடையே உள்ள செய்தியைப் புரிந்துகொள்ள முடியும் என்றால் இதுவும் உங்களுக்குப் புரியும் என்று பதிவு செய்திருக்கிறார் நமீதா.

நமீதாவின் பதிவு பிக்பாஸ் பற்றிதான் என்றும் அவர் கூறும் அந்த பெண் ஓவியாதான் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

English summary
Namitha on what people think of her after bigg boss. Namitha, who was eliminated last week from Bigg Boss Tamil, has come out with a cryptic poem to sum up her experience in Kamal Haasan's show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X