ஸ்மார்ட் கார்டில் சினிமா பற்று! கடவுள் பற்று!... அதற்கடுத்து தேசப் பற்று...அப்பப்பா புல்லரிக்குது!!
பழனி அருகே பயனாளிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது படத்துக்கு பதிலாக தேசியக் கொடியின் படம் இடம் பெற்றுள்ளது.
பழனி: பழனி அருகே ஆயக்குடியில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் பயனாளியின் புகைப்படத்துக்கு பதிலாக தேசியக் கொடியின் படம் இடம்பெற்றுள்ளதால்
ரேஷன் பொருள்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள்களாக ரேஷன் கார்டு புதிதாக வழங்கப்படாமல் உள்தாள் ஒட்டியே புதுப்பிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி படிப்படியாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலும் பெயர், முகவரி, பாலினம் உள்ளிட்ட தவறு என்று புகார் கூறப்படும். ஆனால் சமீபகாலங்களில் போட்டோவே மாறி போயுள்ளது.
ஓமலூரில் குடிகொண்ட காஜல்
சேலம் மாவட்டம் , ஒமலூரை சேர்ந்த பயனாளி சரோஜா பெரியதம்பிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தருமபுரி, போசிநாயக்கன் அள்ளியைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு செருப்புக் கால் அணிந்த புகைப்படம் அச்சிடப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
Recommended Video
விநாயகர்
இதைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டை அருகேயுள்ள வடுகபாளைஅத்தைச் சேர்ந்தவர் நல்லசிவத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில், அவருடைய புகைப்படத்துக்கு பதிலாக விநாயகர் படம் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தேசியக் கொடி
ஸ்மார்ட் கார்டில் சினிமா பற்று, கடவுள் பற்று இருந்த நிலையில் தற்போது தேசப் பற்றும் தொற்றிக் கொண்டது. பழனி அருகே ஆயக்குடியில் தயாசுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது படத்துக்கு பதிலாக தேசியக் கொடி இடம்பெற்றுள்ளது.
பொருள்கள் மறுப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து ரேஷன் கடையில் உள்ளவர்களுக்கு விளக்கிக் கூறி பொருள்களை வாங்க சென்றபோது அவருக்கு பொருள்கள் மறுக்கப்பட்டது.