BREAKING NEWS: வன்முறைக்கு நடுவே லாகூர் வந்திறங்கிய நவாஸ் ஷெரீப்.. ஏர்போர்ட்டில் கைது
லாகூர்: ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நவாஸ் ஷெரிப், மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோரும் நீதிமன்றத்தால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மனைவியின் புற்றுநோய், சிகிச்சைக்காக லண்டனில் தங்கியிருந்த நவாஸ் ஷெரிப் மற்றும் மகள் மரியம் ஆகியோர் அபுதாபி வழியாக லாகூருக்கு இன்று மாலை வருகிறார்கள். முன்னதாக பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் அபுதாபிக்கே சென்று நவாஸுடன் லாகூருக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தனர். ஆனால் லாகூரில் நவாஸ் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே விமானம் அப்படியே இஸ்லாமாபாத்துக்கு திருப்பப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல்களை பொய்யாக்கி, தந்தையும் மகளும் லாகூர் வந்து சேர்ந்துள்ளனர். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு அவர்கள் லாகூர் வந்தனர். அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீன்களில் ரசாயன கலப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
பார்மலின் போன்ற எந்த ரசாயனமும் மீன்களில் கலக்கப்படவில்லை
மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்
யாரும் மீனவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்
மீன் மிகவும் நல்ல ஆரோக்கியமான உணவு - அமைச்சர் ஜெயக்குமார்
கோவை மாணவி பலியானது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்
மாணவி பலியானது வருத்தமளிக்கிறது - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
பயிற்சி அளித்தவர் எங்கள் ஆணையத்தை சேர்ந்தவர் இல்லை
அவர் எங்களிடம் பயிற்சி பெறவே இல்லை - பேரிடர் மேலாண்மை ஆணையம்
ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியது
கபினியிலிருந்து 46 ஆயிரத்து 250 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது
10 மாதத்திற்கு பின் மேட்டூரில் நீர்மட்டம் 75 அடியை எட்டியுள்ளது