For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாலத் தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

மாலத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாலத் தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான நாகை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

Near Maldives a low depression had developed:Chennai Meteorological Center

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களின் பல இடங்களிலும் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் மாலத்தீவு அருகே மற்றொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

English summary
Chennai Meteorological Center said that near Maldives a low depression had developed. Already in the southwestern Bay of bengal a low depression has developed due to that the coastal districts of Tamil Nadu gets rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X